ஒரு நிமிட யோசனை

– அனுகீர்த்தனா


அனைத்து உள்ளங்களுக்கும் அன்பு வணக்கம். பள்ளியில் நடக்கும் பல பேச்சுப்போட்டிகளில் நிறைய பரிசுகளை வாங்கியிருக்கிறேன். குரல்வளம் சிறப்பாக இருப்பதாக பலரும் அவ்வப்பொழுது பாராட்டுவார்கள்.  பழமொழிகள், ஆன்றோர் சிந்தனைகள், தத்துவ முத்துக்கள் போன்ற மனித வாழ்க்கைக்கு உற்சாகம் அளிக்கக் கூடிய கருத்துக்களை நற்றிணை நேயர்களுக்கு வழங்க வேண்டும் என்ற ஆவலில் தினந்தோறும் ஒரு கருத்தை ஒலிவடிவில் வழங்கிவருகிறேன். தமிழ்நாட்டில் மட்டுமல்லாது அயல்நாடுகளிலிருந்தும் வரும் பாராட்டுக்கள் என்னை மேலும் உற்சாகமூட்டுகிறது. காலையில் என்குரலைக் கேட்பது மிகவும் மனதுக்கு இதமாக இருப்பதாகவும், சிந்திக்க வைப்பதாகவும் பலரும் தெரிவித்திருக்கிறார்கள். இத்தொகுப்பு உங்கள் பார்வைக்காக இங்கு வரிசைப் படுத்தப்பட்டுள்ளது. இதில் உள்ள நிறைகுறைகளை தெரிவித்தால் எனது வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கும். எனவே, இந்நிகழ்ச்சி குறித்த தங்கள் கருத்துக்களை இங்குள்ள பின்னூட்டப் பகுதியில் (Comments)  பதிவிடுங்கள். தங்கள் நண்பர்களுக்கும் பகிர்வு செய்யுங்கள்.

என்றும் நன்றியுடன்
ச. அனுகீர்த்தனா
திருச்சி